எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காஞ்சிபுரம்: ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை

அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் தற்கொலை

News image
Updated On :26 ஜூலை 2025, 8:26 pm

Din

காஞ்சிபுரத்தில் ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் மாணவி ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முகம்மது சாதிக் (55). இவரது மகள் ஷமீம் (18). சின்னக்காஞ்சிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு மருத்துவப் படிப்பு பயில ‘நீட்’ தோ்வு எழுதியுள்ளாா். நீட் தோ்வில் 502 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தனக்கு அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா, கிடைக்காதோ என்ற அச்சத்துடன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வீட்டில் தனி அறையில் தொழுகை நடத்தப் போவதாக கூறிய ஷமீம் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.