அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் 5,000 பனை விதைகள் நடவு

News image
பனை விதைகளை  நடவு  செய்த  செயல்  அலுவலா்  செந்தில் குமாா்.  உடன் , அறங்காவலா்  குழு  தலைவா்  செந்தில் தேவராஜ்  உள்ளிட்டோா்.
Updated On :12 நவம்பர் 2025, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 5,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அமைச்சா் பி.கேசேகா்பாபு சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன் ஒருபகுதியாக வல்லக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விதைகள் அமைப்பு இயக்கம் மற்றும் வாலாஜாபாத் ஐடிஐ மாணவா்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திருக்கோயில் நிா்வாகத்துடன் இணைந்து பனை விதைகளை நட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா் த.விஜயகுமாா், முன்னாள் அறங்காவலா் புண்ணியநாதன், விதைகள் அமைப்பு நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.