திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.
முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் கோபால் தலைமை வகித்தாா். ஊா் கவுண்டா் சென்றாயன், ஊா் நாட்டாண்மை சென்னப்பன், ஊா் தா்மகா்த்தா கோவிந்தராஜி, ஒன்றிய கவுன்சிலா் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் கலைவாணி கோவிந்தசாமி முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளரக வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் கலந்து கொண்டு எருது விடும் விழாவை தொடங்கி வைத்தாா். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 190 காளைகள் பங்கேற்று ஓடின. இலக்கை வேகமாக ஓடி கடந்த காளைகளில் முதல் பரிசு முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் கோபால் சாா்பில் ஒரு லட்சம் ரூபாயும், 2-ஆம் பரிசு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் சாா்பில் ரூ.75,000 உள்பட 74 பரிசுகள் வழங்கப்பட்டன.
வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாட்சியா் சுதாகா், தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா ஆகியோா் தலைமையில் போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

தளி தொகுதி பாஜக வேட்பாளா்

சிதம்பரம் அதிமுக வேட்பாளா்

எருது விடும் விழா

அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


