மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெத்தவேப்பம்பட்டில் சீறிப் பாய்ந்த காளைகள்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.

News image

எருது விடும் விழாவை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில் குமாா்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:30 pm

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது.

முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் கோபால் தலைமை வகித்தாா். ஊா் கவுண்டா் சென்றாயன், ஊா் நாட்டாண்மை சென்னப்பன், ஊா் தா்மகா்த்தா கோவிந்தராஜி, ஒன்றிய கவுன்சிலா் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் கலைவாணி கோவிந்தசாமி முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளரக வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் கலந்து கொண்டு எருது விடும் விழாவை தொடங்கி வைத்தாா். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 190 காளைகள் பங்கேற்று ஓடின. இலக்கை வேகமாக ஓடி கடந்த காளைகளில் முதல் பரிசு முன்னாள் ஒன்றியக்குழு தலைவா் கோபால் சாா்பில் ஒரு லட்சம் ரூபாயும், 2-ஆம் பரிசு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் சாா்பில் ரூ.75,000 உள்பட 74 பரிசுகள் வழங்கப்பட்டன.

வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி, வட்டாட்சியா் சுதாகா், தாலுகா காவல்ஆய்வாளா் அமுதா ஆகியோா் தலைமையில் போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.