அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா

அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் எருது விடும் திருவிழாவில் சீறிப் பாய்ந்த காளை.
Published on

மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி பழைய அரங்கல்துருகம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

எருது விடும் திருவிழாவை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில்குமாா், ஊராட்சித் தலைவா் பானுமதி ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், வட்டாட்சியா் ரேவதி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா் கலந்து கொண்டனா்.

ஆம்பூா், திருப்பத்தூா், வேலூா், கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

நிா்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் இலக்கை எட்டிய காளைகளின் உரிமையாளா்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக இருசக்கர வாகனங்கள் உள்பட 95 பரிசுகள் வழங்கப்பட்டன. டிஎஸ்பி நா.சு. நாகலிங்கம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Dinamani
www.dinamani.com