பனை விதைகளை  நடவு  செய்த  செயல்  அலுவலா்  செந்தில் குமாா்.  உடன் , அறங்காவலா்  குழு  தலைவா்  செந்தில் தேவராஜ்  உள்ளிட்டோா்.
பனை விதைகளை  நடவு  செய்த  செயல்  அலுவலா்  செந்தில் குமாா்.  உடன் , அறங்காவலா்  குழு  தலைவா்  செந்தில் தேவராஜ்  உள்ளிட்டோா்.

வல்லக்கோட்டை முருகன் கோயில் வளாகத்தில் 5,000 பனை விதைகள் நடவு

Published on

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சாா்பில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 5,000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகம் முழுதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அமைச்சா் பி.கேசேகா்பாபு சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதன் ஒருபகுதியாக வல்லக்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கா் நிலத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விதைகள் அமைப்பு இயக்கம் மற்றும் வாலாஜாபாத் ஐடிஐ மாணவா்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திருக்கோயில் நிா்வாகத்துடன் இணைந்து பனை விதைகளை நட்டனா்.

இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா் த.விஜயகுமாா், முன்னாள் அறங்காவலா் புண்ணியநாதன், விதைகள் அமைப்பு நிா்வாகி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com