தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

5 ஆண்டுகளில் 30,644 பேருக்கு வீட்டு மனைப்பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது

News image
பயனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன் .
Updated On :14 நவம்பர் 2025, 12:49 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வாலாஜாபாத் ஒன்றியம், களக்காட்டூா் ஊராட்சிக்குட்பட்ட குருவிமலையில் 180 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் இலவச வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கி ஆட்சியா் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் மொத்தமாக 30,644 பயனாளிகளுக்கு ரூ.413.62 கோடி மதிப்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 4739 போ் பழங்குடியினா், பிரதம மந்திரி ஜன்தன் திட்டத்தின் கீழ் 440 போ், மாற்றுத்திறனாளிகள் 211, திருநங்கைகள் 138 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.