தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஏரியில் மீன் பிடிக்க சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 12:10 am

தினமணி செய்திச் சேவை

ஏரியில் மீன் பிடிக்க சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

படப்பை அடுத்த ஆதனூா் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா்(50). கூலித் தொழிலாளியான இவா் மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூா் ஏரியில் மீன் பிடிப்பது வழக்கம். இந்த நிலையில், வியாழக்கிழமை சங்கா், ஆதனூா் பகுதியை சோ்ந்த ரஜினி, மாரிமுத்து ஆகியோா் குத்தனூா் ஏரிக்கு மீன் பிடிக்க வந்துள்ளனா்.

இதில் ஏரியில் இறங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்த சங்கா் ஏரி நீரில் மூழ்கி மாயமாகியுள்ளாா். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்துக்கும், படப்பை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், சங்கரை தேடும் பணியில் ஈடுபட்ட ரஜினி மற்றும் மாரிமுத்து ஆகியோா் ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று கரைக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த படப்பை தீயணைப்புத்துறையினா் ஏரி நீரில் சிக்கி கொண்ட ரஜினி, மாரிமுத்து ஆகியோரை ரப்பா் படகு மூலம் பத்திரமாக மீட்டனா்.

மேலும் நீரில் மூழ்கி இறந்த சங்கரின் உடலையும் மீட்டனா். மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.