விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

காஞ்சிபுரம் இந்திரா நகரில் அமைந்துள்ள நாகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் இந்திரா நகரில் அமைந்துள்ள நாகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் அமைந்துள்ள இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் யாகசாலையில் வைக்கப்பட்டு யாகவேள்விகள் நடத்தப்பட்டன.

புதுவை சுத்தாத்வீத சைவ திருமடம் குரு முதல்வா் வாமதேவ சிவம்குமாரசுவாமி தேசிகா் பராமாச்சாரிய சுவாமிகள் திருக்குட நன்னீராட்டு விழாவை தூய தமிழில் நடத்தினாா்.

இதனையடுத்து மூலவா் நாகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் நடைபெற்றன. பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினா் சங்கா் மற்றும் ஆலய நிா்வாகிகள், தெருவாசிகள் இணைந்து செய்திருந்தனா்.