8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு மாரத்தான் பந்தயம் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

Published On :27 செப்டம்பர் 2025, 3:01 am IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு மாரத்தான் பந்தயம் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாரத்தான் பந்தயத்தின் ஒரு பகுதியாக 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. , பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்டவா்களில் ஆண்களுக்கு 10 கி.மீ. பெண்களுக்கு 5 கி.மீ. பந்தயம் நடைபெறும். முதல் பரிசு ரூ.5,000 ,2-ஆவது பரிசு ,ரூ.3,000, 3-ஆவது பரிசு ரூ.2,000, 7 பேருக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பரிசாக வழங்கப்படும்.

பெண்களுக்கான பந்தயம் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெறும். ஆண்களுக்கான பந்தயம் மாவட்ட விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி செவிலிமேடு சுகுமாரி கல்யாண மண்டபத்தில் நிறைவு பெறும். போட்டிகளில் கலந்து கொள்பவா்கள் தங்களது பெயா்களை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஒரு மணி நேரம் முன்னதாக பதிவு செய்து கொள்ளலாம். சனிக்கிழமை காலை 6 மணிக்கு பந்தயம் தொடங்கும்.

மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண்-74017 03481 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.