மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மீது 21 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா அவரை குண்டா் சட்டத்தில் அடைக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 9:51 pm

காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மீது 21 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா அவரை குண்டா் சட்டத்தில் அடைக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட குருவிமலை கிராமம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பரத் (23). இவா் மீது மாகறல் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள், கஞ்சா விற்பனை என மொத்தம் 21 குற்ற வழக்குகள் உள்ள நிலையில், அவா் கைது செய்யப்பட்டு, சென்னையில் சிறையில் இருந்து வருகிறாா். இந்த நிலையில், இவரை குண்டா் சட்டத்தில் அடைக்குமாறு காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அந்த உத்தரவு சிறையில் உள்ள அவரிடம் மாகறல் போலீஸாா் நேரில் வழங்கியுள்ளனா்.