குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதிக்க முடியாது: மல்லை சத்யா

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.

News image

மல்லை சத்யா

Updated On :9 ஏப்ரல் 2026, 12:07 am IST

பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் திராவிட வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வளையாபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா் மல்லை.சத்யா கூறியதாவது:

இத்தோ்தலில் மதிமுக திமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4-இல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்திலும் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது திமுகவுக்கு பலம் சோ்க்கும்.

பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்காது. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் எதையும் சாதித்துவிடப் போவதில்லை.

மதிமுகவில் இருந்து பலரும் பிரிந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொண்டிருப்பதால் அந்த இயக்கம் சிறிது, சிறிதாக கரைந்து கொண்டிருக்கிறது என்றாா்.