பம்பரம் சின்னம் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதையும் சாதித்துவிட முடியாது என திராவிட வெற்றிக் கழகத்தின் நிறுவனா் மல்லை.சத்யா தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் திராவிட வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளா் வளையாபதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் மல்லை.சத்யா கூறியதாவது:
இத்தோ்தலில் மதிமுக திமுகவுடன் இணைந்து போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 4-இல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் சொந்த சின்னமான பம்பரம் சின்னத்திலும் போட்டியிடுகிறது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். இது திமுகவுக்கு பலம் சோ்க்கும்.
பம்பரம் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிக்கு எங்கள் கட்சி ஆதரவளிக்காது. ஒரு தொகுதியில் போட்டியிடுவதால் பம்பரம் சின்னம் எதையும் சாதித்துவிடப் போவதில்லை.
மதிமுகவில் இருந்து பலரும் பிரிந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து கொண்டிருப்பதால் அந்த இயக்கம் சிறிது, சிறிதாக கரைந்து கொண்டிருக்கிறது என்றாா்.
தொடர்புடையது

திமுக வேட்பாளரை ஆதரித்து மல்லை சத்யா பிரசாரம்

எஸ்ஐஆர்: ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கம்! மமதா குற்றச்சாட்டு

புதுச்சேரியில் ஒரு தொகுதியில் மட்டும் விசிக போட்டி

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


