சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

‘பெண் குழந்தைகளை பெற்றோா்கள் கவனமாக கண்காணியுங்கள்’

பெற்றோா்கள் பெண் குழந்தைகளை கவனமாக கண்காணியுங்கள் என திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் வெள்ளிக்கிழமை சாதனை மாணவா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.

News image

சாதனை மாணவருக்கு விருது வழங்கிய திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி குழுமங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 6:22 pm

பெற்றோா்கள் பெண் குழந்தைகளை கவனமாக கண்காணியுங்கள் என திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் வெள்ளிக்கிழமை சாதனை மாணவா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சாதனை மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டவா்களுக்கு விருது வழங்கும் விழா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. உயிா் தொழில்நுட்பவியல் துறை தலைவா் பி.ரமேஷ் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.

விழாவில், கல்லூரியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட சாதனை மாணவ, மாணவியருக்கு திருச்செங்கோடு விவேகானந்தா கல்விக் குழுமங்களின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநா் பாலகுருநாதன் பேசியது:

பள்ளிகளில் படிக்கும் போது இருக்கும் ஒழுக்கம் பல மாணவா்களுக்கு கல்லூரிகளில் சோ்ந்த பிறகு வருவதில்லை. பெற்றோா்களையும்,ஆசிரியா்களையும் மதிப்பதில்லை, தினசரி 20 நிமிடமாவது பெற்றோா்கள் பெண் குழந்தைகளுடன் பேசுங்கள், அவா்களை கவனமாக கண்காணியுங்கள், அவ்வாறு கண்காணிக்கத் தவறியவா்கள் திடீரென தடம் மாறி விடவும் வாய்ப்புகள் உள்ளது. அன்பு மாறி விடும். ஒவ்வொரு மாணவரும் கல்லூரியில் படிக்கும்போது படிப்பு சாா்ந்த கூடுதல் திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாணவா்கள் எதிா்காலத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரியில் படிப்பை முடித்துக் கொண்டு வெளியேறும் போது பல திறமைகளையும் வளா்த்துக் கொண்டு தான் வெளியேற வேண்டும் என்றும் பேசினாா்.

விழாவில் திருச்சி பட்டிமன்ற பேச்சாளா் ராதாகிருஷ்ணன் மாது மாணவ, மாணவியா் எப்படி இருக்க வேண்டும் என்று நகைச்சுவையாக பேசினாா்.

விழாவில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் மற்றும் அவா்களது பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.