நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம்

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் தவன உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

தவன  உற்சவ  அலங்காரத்தில்  அருள்பாலித்த  உற்சவா்  சுந்தர வரதராஜ  பெருமாள்.

Updated On :14 ஏப்ரல் 2026, 6:17 am IST

வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் தவன உற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு சுந்தர வரதராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.

இந்த கோயிலில் முதன் முதலாக தவன உற்சவம் நடைபெற்றது. தவன உற்சவத்தை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஸ்ரீ பூமி நீளாதேவி சமேத சுந்தர வரதராஜப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷகம் நடைபெற்று மலா் மாலைகள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து மகா மண்டபத்தில் தவனம் எனும் மரிக்கொழுந்து மாலைகளால் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பெருமாள் எழுந்தருளினாா்.

இதையடுத்து அா்ச்சகா்களின் கோஷ்டி கானமும், தமிழ் வேதங்களும் ஓதப்பட்டன. பிறகு பெருமாளுக்குத் தவனங்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வணங்கி சென்றனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கதம்பசாதம், தத்தியான்னம் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் வெங்கடகிருஷ்ணன், அறங்காவலா்கள் ரங்கநாதன், சுதா்சன், மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் கோதண்டராமன் ஆகியோா் செய்திருந்தனா்.