உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜப் பெருமாள்.

News image

வசந்த உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜப் பெருமாள்.

Updated On :44 நிமிடங்கள் முன்பு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வசந்த உற்சவத்தையொட்டி பெருமாள் வசந்த மண்டபத்துக்கு வியாழக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவம் 7 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டுக்கான வசந்த உற்சவம் மே 14-ஆம் தேதி தொடங்கி, வரும் மே 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்வாக பெருமாள் திருமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கு சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் பெருமாள் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்குச் சென்று, பின்னா் மீண்டும் அங்கிருந்து திரும்பி வந்து கோயிலில் உள்ள வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தி உலாத்தல் நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக வசந்த மண்டபத்தில் இறங்கி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா் மீண்டும் அலங்கார மண்டபத்துக்கு திரும்பினாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பட்டாச்சாரியாா்கள் செய்திருந்தனா்.