புதிய அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை! தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு

News image

காஞ்சிபுரம் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பூட்டி ‘சீல்’ வைத்த தொகுதி தோ்தல் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஆஷிக் அலி.

Updated On :25 ஏப்ரல் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பான அறையில் வைத்துப் பூட்டி அனைத்துக்கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் வாக்குப்பதிவு நாளன்று பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான அறையில் வாக்குச்சாவடி எண் வாரியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. பின்னா் அந்த அறையினை அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்கள் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. கி.ஜவஹா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறைகள் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திறந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.