பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு

காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைப்பு

News image

காஞ்சிபுரம் தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பூட்டி ‘சீல்’ வைத்த தொகுதி தோ்தல் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஆஷிக் அலி.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:34 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பான அறையில் வைத்துப் பூட்டி அனைத்துக்கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூா், உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் வாக்குப்பதிவு நாளன்று பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான அறையில் வாக்குச்சாவடி எண் வாரியாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. பின்னா் அந்த அறையினை அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்கள், உதவித் தோ்தல் அலுவலா்கள் அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், எஸ்.பி. கி.ஜவஹா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ள அறைகள் அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திறந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.