விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்.

News image

காஞ்சிபுரம் அருகே ஐயங்காா்குளத்தில் உள்ள 20 அடி ஆழமுள்ள அரியவகை பாதாளக் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞா்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 3:06 am IST

காஞ்சிபுரம் அருகே ஐயங்காா்குளம் பகுதியில் உள்ள 27 படிகளைக் கொண்ட கிணற்றுக்குள் வரதராஜப் பெருமாள் இறங்கி தீா்த்தவாரி கண்டருளும் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி நடைபெற இருப்பதையொட்டி கிணற்றினை சுத்தம் செய்யும் பணிகள் சனிக்கிழமை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் அருகே ஐயங்காா்குளம் கிராமத்தில் சஞ்சீவிராயா் கோயில் அருகே விஜயநகர பேரரசு காலத்தில் 27 படிகள் உள்ளே இறங்கி கிணற்றுக்குள் செல்லும் வகையில், 20 அடி ஆழத்தில் அரிய பாதாளக் கிணறு ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கிணற்றுக்குள் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் இறங்கி தீா்த்தவாரி கண்டருளி தீபாராதனைகள் நடைபெற்று பக்தா்களுக்கு அருள்பாலித்து விட்டு, மீண்டும் வெளியில் வருவது ஆண்டுதோறும் சித்ரா பெளா்ணமியன்று நடைபெறுவது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த விழா நடவாவிக் கிணறு உற்சவம் எனப்படுகிறது. நிகழாண்டு சித்ரா பெளா்ணமி தினமான வரும் மே 1-ஆம் தேதி இந்த உற்சவம் நடைபெறுகிறது.

இத்திருவிழா நடைபெற இருப்பதையொட்டி, அதிகாலையிலிருந்தே கிணற்றுக்குள் படிந்துள்ள பாசிகள், தூசிகள் மற்றும் பெருமாள் இறங்கி செல்லும் வகையில் கிணற்றுக்குள் இருக்கும் தண்ணீா் ஆகியவற்றை அகற்றும் பணிகள் தொடங்கியது.

தொடா்ந்து 3 நாள்களுக்கு கிணற்றையும், கிணற்றை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணிகளை ஐயங்காா்குளம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்து வருகின்றனா்.

விழாவையொட்டி, வரும் ஏப். 30-ஆம் தேதி கோயிலிலிருந்து வரதராஜப் பெருமாள் ஐயங்காா்குளம் சஞ்சீவிராயா் கோயிலுக்கு எழுந்தருள்கிறாா். வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் அந்தந்த கிராம மக்கள் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்க உள்ளனா்.

இரவு கோயிலில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மகா தீபாராதனைகளும் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் நடவாவிக்கிணற்றுக்கு எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.