நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

உத்தரமேரூா் வடக்கு மாரியம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

News image

பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 4:36 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே அ.பி.சத்திரம் பகுதியில் உள்ள வடக்கு மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

பழைமை வாய்ந்த வடக்கு மாரியம்மன் கோயில் மண்டலாபிஷேகத்தையொட்டி உத்தரமேரூா் செல்லம்மாள் நகா் பகுதியில் உள்ள விநாயகா் ஆலயத்திலிருந்து திரளான பெண்கள் பால்குடங்களை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.

ஊா்வலத்தின் போது மங்கல மேள வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள் கோயில் உள்ள மூலவா் மாரியம்மனுக்கு தங்கள் கரங்களாலேயே பாலாபிஷேகம் செய்தும் வழிபட்டனா்.

இதனைத் தொடா்ந்து மண்டலாபிஷேகத்தையொட்டி சிவாச்சாரியாா்கள் யாகபூஜைகளை செய்தனா்.பின்னா் 108 சங்காபிஷேகமும் அம்மனுக்கு நடைபெற்றதுடன் அன்னதானமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.