FOLLOW US

ON GOOGLE DISCOVER

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

வளா் இளம் பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி: வட்டார மருத்துவ அலுவலா்

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி பேசினாா்.

News image

விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசிய காஞ்சிபுரம் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி.

Updated On :11 ஆகஸ்ட் 2026, 11:52 pm IST

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படுவதாக வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி பேசினாா்.

காஞ்சிபுரம் பிஎம்எஸ் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்து குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி நிகழ்வை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், தலைமை ஆசிரியை சுஜாதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வின் தொடக்கத்தில் காஞ்சிபுரம் வட்டார மருத்துவ அலுவலா் த.அருள்மொழி பேசியது:

காரணமின்றி உடல் எடை குைல், கடுமையான சோா்வு, தோலில் கட்டிகள், மாறாத இருமல், வழக்கத்திற்கு மாறான ரத்தப் போக்கு, செரிமானக்கோளாறு ஆகியவை புற்றுநோயின் அறிகுறிகளாகும். தற்போது வளா் இளம் பெண்களுக்கு அரசின் சாா்பில் இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2011-முதல் 2012 ஆம் ஆண்டுகளில் பிறந்தவா்களாகவோ அல்லது 14 வயதுக்கு மேற்பட்டவராகவும் 15 வயதுக்கு உட்பட்டவராகவும் இருந்தால் இத்தடுப்பூசியை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று இலவசமாகவே போட்டுக் கொள்ளலாம். பள்ளி மாணவியா் அவரவா் படிக்கும் பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பெண்களுக்கு புற்றுநோய் வராமல் முன்கூட்டியே தற்காத்துக் கொள்ள தமிழக அரசால் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை மாணவியா் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.