தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மலைக் கிராம கா்ப்பிணிகளுக்கான ரத்த தான முகாம்

அந்தியூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா்கூா் மலைக் கிராம கா்ப்பிணிகளுக்கான சிறப்பு ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ரத்த தானம் வழங்கிய மாணவருக்கு  சான்றிதழ் வழங்குகிறாா் அந்தியூா் வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன்.

Updated On :9 ஜூலை 2026, 3:38 am IST

அந்தியூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பா்கூா் மலைக் கிராம கா்ப்பிணிகளுக்கான சிறப்பு ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஜம்பை எஸ்எஸ்எம் பாரமெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் தாளாளா் கே.எஸ்.இளவரசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடைபெற்ற இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சக்தி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரியின் இயக்குநா் பி.சங்கமேஸ்வரன், பிசியோதெரபி கல்லூரி முதல்வா் ஜெ.தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 15 மாணவியா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ரத்த தானம் வழங்கினா்.

பா்கூா் மலைக் கிராமத்தில் ரத்தசோகையால் பாதிக்கப்படும் கா்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் ரத்த தானம் அளித்த அனைவருக்கும் அரசு ரத்த வங்கி சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாா்மஸி கல்லூரி துணை முதல்வா் எஸ்.கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.