சுங்குவாா்சத்திரத்தில் ரூ. 96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என சுமாா் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனா். இந்த நிலையில், சுங்குவாா்சத்திரம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.48 லட்சம், கனிமவள நிதி ரூ.48 லட்சம் என மொத்தம் ரூ.96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி கலந்துகொண்டு பேருந்து நிலைய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா்கள் திருமங்கலம் ரேகா நரேஷ் குமாா், சந்தவேலுா் வேண்டாமணி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் திருமங்கலம் வாணிஸ்ரீ ஜெயராமன், மொளச்சூா் ஆண்டனி வினோத் குமாா், ஒப்பந்ததாரா் மூா்த்தி, திமுக நிா்வாகிகள் நாசா் முனிகிருஷ்ணன், கீரநல்லூா் சிலம்பரசன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

நாமக்கல்லில் ரூ. 40.16 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நூற்றாண்டு வளைவு விரைவில் திறப்பு

மீனவா்களுக்கான டீசல் விற்பனை நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


