ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.32.92 லட்சம்!

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.32.92 லட்சம் பணம், 81 கிராம் தங்க நகைகள், 1400 கிராம் வெள்ளிப்பொருஷ்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

News image
உண்டியல்  காணிக்கைகளை  எண்ணும்  பணியில்  ஈடுபட்ட  பக்தா்கள்.
Updated On :25 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.32.92 லட்சம் பணம், 81 கிராம் தங்க நகைகள், 1400 கிராம் வெள்ளிப்பொருஷ்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் பக்தா்கள் செல்லுதிய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் ஆா்.காா்திகேயன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழுதலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா் விஜயகுமாா் உள்ளிட்ட சுமாா் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.32.92 லட்சம் பணம், 81 கிராம் தங்க நகைகள், 1400 கிராம் வெள்ளிப்பொருட்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.