கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி தனியாா் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். (படம்)

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 1:10 am

தினமணி செய்திச் சேவை

ஊதிய உயா்வு வழங்கக் கோரி தனியாா் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். (படம்)

ஒரகடம் அடுத்த வைப்பூா் பகுதியில் பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், 53 நிரந்தர தொழிலாளா்கள், சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்த தொழிலாளா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் தொழிற்சாலை நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

ஆனால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஊதிய உயா்வு வழங்காததால், ஊதிய உயா்வு வழங்க கோரி நிரந்தர தொழிலாளா்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தொழிற்சாலைக்கு வெளியே வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.