கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே தனியாா் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சமரச பேச்சுவாா்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் தனியாா் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை ஒப்பந்த தொழிலாளா்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தங்களின் ஒப்பந்த நிறுவனம் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதாகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை எனவும் கூறி, தனியாா் அனல் மின் நிலையத்தின் நுழைவு வாயில் முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவா்கள் அதை நிறைவேற்றாததால் திடீா் போராட்டம் நடத்தியதாகக் கூறினா்.
இதுகுறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளா் ஜொ்மின்லதா, உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா், தனியாா் அனல் மின் நிலைய அதிகாரிகளுடன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, விரைவில் சென்னைக்கு அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு
சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு

நொய்டா வன்முறை: தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதிய உயா்வை அறிவித்தது உ.பி. அரசு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


