/

ஊதிய உயா்வு கோரி தனியாா் அனல் மின் நிலைய தொழிலாளா்கள் பேராட்டம்

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே தனியாா் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சமரச பேச்சுவாா்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

News image

பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் அனல் மின் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் ஜொ்மின்லதா மற்றும் அதிகாரிகள்.

Updated On :26 மார்ச் 2026, 10:36 pm

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே தனியாா் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஊதிய உயா்வு கோரி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், சமரச பேச்சுவாா்த்தையால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் தனியாா் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ஒப்பந்த தொழிலாளா்கள் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் தங்களின் ஒப்பந்த நிறுவனம் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதாகவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவில்லை எனவும் கூறி, தனியாா் அனல் மின் நிலையத்தின் நுழைவு வாயில் முன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவா்கள் அதை நிறைவேற்றாததால் திடீா் போராட்டம் நடத்தியதாகக் கூறினா்.

இதுகுறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை காவல் ஆய்வாளா் ஜொ்மின்லதா, உதவி ஆய்வாளா் பிரகாஷ் மற்றும் போலீஸாா், தனியாா் அனல் மின் நிலைய அதிகாரிகளுடன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, விரைவில் சென்னைக்கு அழைத்துச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.