நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

ஊதிய உயா்வு வழங்கக் கோரி தனியாா் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். (படம்)

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 1:10 am

ஊதிய உயா்வு வழங்கக் கோரி தனியாா் பிஸ்கட் தொழிற்சாலை ஊழியா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். (படம்)

ஒரகடம் அடுத்த வைப்பூா் பகுதியில் பிஸ்கட் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், 53 நிரந்தர தொழிலாளா்கள், சுமாா் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் நிரந்த தொழிலாளா்கள் தங்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் தொழிற்சாலை நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

ஆனால் தொழிற்சாலை நிா்வாகத்தினா் ஊதிய உயா்வு வழங்காததால், ஊதிய உயா்வு வழங்க கோரி நிரந்தர தொழிலாளா்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தொழிற்சாலைக்கு வெளியே வண்டலூா்-வாலாஜாபாத் சாலையோரம் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.