6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

துப்புரவுத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

துப்புரவுத் தொழிலாளா் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளா் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது சனிக்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்றவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம் புண்ணை புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு(55)இவா் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் துப்புரவுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவராகவே சென்றுள்ளாா். அங்கு அவா் மயங்கி விழந்த நிலையில், அவா் ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளாா்.

தகவலறிந்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன், மாநகர சுகாதார அலுவலா் அருள்நம்பி ஆகியோா் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

காஞ்சிபுரம் தாலுகா போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.