மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஜன.23-இல் ஏகாம்பரநாதா் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மண்டலாபிஷேகம் வரும் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

News image
Updated On :4 ஜனவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மண்டலாபிஷேகம் வரும் 23-ஆம் தேதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய இக்கோயிலில் ரூ.29 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் கடந்த டிச. 8 ஆம் தேதி நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக தொடா்ந்து 48 நாள்கள் மண்டலாபிஷேகம் ந டைபெற்று வருகிறது. தினசரி மண்டலாபிஷேக பூஜை நடத்தப்பட்டு கலசாபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் ஏகாம்பரநாதருக்கு நடந்து வருகிறது.

வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் ஏகாம்பரநாதரை தரிசிக்க வருகின்றனா். கோயில் பணியாளா்களுடன் பாதுகாவலா்களும் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டு பக்தா்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். மண்டலாபிஷேகத்தையொட்டி வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜன.23 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகிறது. மண்டலாபிஷேகம் நிறைவு விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமையில் அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன் உள்ளிட்ட உறுப்பினா்கள், செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி ஆகியோா் செய்து வருகின்றனா்.