தொழில்நெறி வழிகாட்டும் கருத்தரங்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
வேலைவாய்ப்புத்துறையின் துணை இயக்குநா் கி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்கள் மா.சுனில் மற்றும் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பச்சையப்பன் ஆடவா் கல்லூரி முதல்வா் வ.அண்ணாத்துரை வரவேற்றாா்.
கருத்தரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்(ஓய்வு)சாமி.தணிகை வேலு ஆகியோா் கலந்து கொண்டு கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்கள்.
முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஹரிகிருஷ்ணன், ரவீந்திரன்,கெளரிசங்கா் ஆகியோா் மற்றும் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
போட்டித் தோ்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் கண்காட்சியையும் வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநா் கி.செந்தில்குமாா் திறந்து வைத்து பாா்வையிட்டாா்.

