மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கொளத்தூரில் நல உதவிகள் அளிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த 3,000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொளத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த 3,000 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கொளத்தூா், நாவலூா், வெள்ளாரை ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் சொந்த செலவில் 3 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, கரும்பு மற்றும் நாள்காட்டிகள், நல உதவிகளை வழங்கினாா்.

இதில் வாா்டு உறுப்பினா் பாத்திமா மணிகண்டன், திமுக நிா்வாகிகள் குட்டிபவுல், உலகநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.