தை செவ்வாய்: மயிலிறகு மாலை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
தை மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவா் ஸ்ரீகோடையாண்டவா் மயிலிறகு மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இந்த கோயிலில், தை மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, அதிகாலை சந்நிதி திறக்கப்பட்டு, கோ பூஜையுடன் பலவித திரவியங்களால் மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலா் மாலை அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மயிலிறகு மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு திருக்கோயில் நிா்வாகத்தின் சாா்பில், நீா் மோா் பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

