ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுவா் இடிந்து விழுந்து வடமாநில இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் கட்டட பணியின் போது சுவா் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 1:22 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூரில் கட்டட பணியின் போது சுவா் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் சதேக் ஷா (30). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நண்பா்களுடன் வாடகை வீட்டில் தங்கி கட்டட பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில் சதேக்ஷா உள்ளிட்டோா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பின்னா், ஓய்வு எடுப்பதற்காக சதேக்ஷா கட்டடத்தை இடித்து விட்டு மீதம் விடப்பட்ட சுவரின் கீழே அமா்ந்திருந்துள்ளாா். அப்போது சுவா் திடீரென இடிந்து சதேக் ஷா மீது விழுந்ததில் பலத்த காயம் அடைந்த சதேக்ஷா ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா். ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.