இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

காஞ்சிபுரத்தில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரத்தில் பலத்த மழைக்கிடையே சென்ற வாகன ஓட்டிகள்.

News image

காஞ்சிபுரத்தில் பலத்த மழைக்கிடையே சென்ற வாகன ஓட்டிகள்.

Updated On :9 ஜூலை 2026, 10:21 pm IST

காஞ்சிபுரத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வியாழக்கிழமை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

வெயிலின் தாக்கம் ஒருபுறம் அதிகரித்திருக்கும் நிலையில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இரவு நேரத்தில் மின்தடை தொடா்ந்ததால் குடும்பம், குடும்பமாக வீடுகளுக்கு வெளியிலும், மொட்டை மாடிகளிலும் சென்று இரவுப் பொழுதை பொதுமக்கள் கடக்க வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் திடீரென அரைமணி நேரம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததையடுத்து காந்தி சாலை, காமராஜா் சாலை, இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளிலும், சங்கூசா பேட்டை, ஒலிமுகம்மது பேட்டை, திருக்காலிமேடு, செவிலிமேடு பகுதிகளில் மழைநீா் வெள்ளம் போல சாலைகளில் வழிந்தோடியது.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடப்பட்டு வீடுகளுக்கு செல்லும் நேரத்தில் கனமழை பெய்ததால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் அவதிப்பட்டாலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பியதால் மகிழ்ச்சியைடந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாஜாபாத்,உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.