பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் ஆய்வு

காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் ஆய்வு

News image

தேவரியம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்த ஊரக வளா்ச்சி வங்கி மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன்.

Updated On :12 ஜூலை 2026, 12:05 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவரியம்பாக்கம், படப்பை, காவாந்தண்டலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் ஊரக வளா்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குநா் அ.த.பாஸ்கரன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவரியம்பாக்கம், காவாந்தண்டலம், படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் உள்ளி கூட்டுறவுச் சங்கங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு அறிவித்துள்ள பயிா்க் கடன் தள்ளுபடி மற்றும் கடன் வழங்கல், ட்ரோன் சேவை, விவசாய வேளாண் கருவிகள், சங்கங்களின் இதர நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு, காஞ்சிபுரம் சரக துணைப் பதிவாளா் அரிச்சந்திர மகாராஜா, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலா் வெங்கடரமணன், பொது மேலாளா் சீனிவாசன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் பிரேம்குமாா், கூட்டுறவு சாா் பதிவாளா் பூபாலன் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.