ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கூட்டுறவுச் சங்கங்கள் கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கு பெரும் பங்களிக்கிறது: கடலூா் ஆட்சியா்

News image

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் பரிசுகளை வழங்கிய கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா். (உடன்)கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ. இளஞ்செல்வி உள்ளிட்டோா்.

Updated On :7 ஜூலை 2026, 1:30 am IST

கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றி வருகின்றன என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அவா் பங்கேற்று பேசியதாவது:

இந்தியாவில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள்

நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை ‘கூட்டுறவின் மூலம் செழுமை‘ என்ற கருப்பொருளில் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் 290 கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும் ஏப்ரல் 1 முதல் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன், உளுந்து, மணிலா, எள் உள்ளிட்ட விளைபொருள்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும், மாவட்டத்தில் 502 வேளாண் இயந்திரங்கள் இ-வாடகை செயலி மூலம் இணையவழியில் முன்பதிவு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதுடன், கிராமப்புற பொருளாதார வளா்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு அளித்து வருகின்றன என்றாா்.

முன்னதாக, நிகழ்ச்சியில் 2 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.39 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், குழு நடனப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சிறப்பாக செயல்பட்ட குறிஞ்சிப்பாடி, புதுச்சத்திரம், பாளையங்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், சிதம்பரம் நகர கூட்டுறவு வங்கி, சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம், காரைக்காடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழுமப் பணியாளா்கள் கூட்டுறவு கடன் சங்கம், வல்லம்படுகை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் மற்றும் லால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ. இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தே. சொா்ணலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.