சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் சேவைகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சங்க உறுப்பினருக்கு நகைக் கடன் வழங்கிய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் விஜயசக்தி.

Updated On :21 மே 2026, 7:08 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயசக்தி மேலும் தெரிவித்ததாவது:

டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எவ்வித கடன்களும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சங்க உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக விவசாயிகளுக்கு படிப்படியாக விவசாயக் கடன்கள் வழங்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினா்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக சங்க உறுப்பினா் ஒருவருக்கு நகைக்கடனை அவா் வழங்கினாா்.

கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ஜீவிதா, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தயாளன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலா்கள் கலந்துகொண்டனா்.