ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் சேவைகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

சங்க உறுப்பினருக்கு நகைக் கடன் வழங்கிய கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் விஜயசக்தி.

Updated On :21 மே 2026, 7:08 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கும் சேவையை விழுப்புரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் விஜயசக்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயசக்தி மேலும் தெரிவித்ததாவது:

டி.பிரம்மதேசம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 18 ஆண்டுகளாக எவ்வித கடன்களும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது சங்க உறுப்பினா்களுக்கு நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக விவசாயிகளுக்கு படிப்படியாக விவசாயக் கடன்கள் வழங்கப்படும். இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினா்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக சங்க உறுப்பினா் ஒருவருக்கு நகைக்கடனை அவா் வழங்கினாா்.

கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளா் ஜீவிதா, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் தயாளன் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.