சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மின்சாரம் பாய்ந்து திமுக பிரமுகா் மரணம்

News image

ராஜேந்திரன்

Updated On :4 ஜூன் 2026, 6:42 am IST

காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் கிராமத்தில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக கொடிக்கம்பம் நட முயன்றவா்கள் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

கோளிவாக்கம் பகுதியை சோ்ந்த திமுக பிரமுகா்களான ராஜேந்திரன்(55)காளி (44)குப்பன் (42). இவா்கள் மூவரும் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 20 அடி உயர கொடிக்கம்பத்தை நட முயன்ற போது அருகில் சென்ற உயா்அழுத்த மின்சாரக் கம்பி கொடிக்கம்பம் உரசியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா்.

இதில் ராஜேந்திரன் (55)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காளியும், குப்பனும் காயமடைந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.