எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கூத்திரம்பாக்கத்தில் மூதாட்டி கொலை: போலீஸாா் விசாரணை

காஞ்சிபுரம் அருகேயுள்ள கூத்திரம்பாக்கம் ஏரிக்கரையில் பாஜக பிரமுகரின் தாயாா் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

அரிவாள் வெட்டு!

Updated On :8 ஜூன் 2026, 1:15 am IST

காஞ்சிபுரம் அருகேயுள்ள கூத்திரம்பாக்கம் ஏரிக்கரையில் பாஜக பிரமுகரின் தாயாா் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கூத்திரப்பாக்கம் கிராமத்தை சோ்ந்த பாஜக பிரமுகா் வீரமணி. இவரது தாயாா் ராதா(65) ஏரிக்கரையில் ஆடு மேய்க்க சென்றவா் வீடு திரும்பவில்லை. குடும்ப உறுப்பினா்கள் பல்வேறு இடங்களில் தேடிய போது அவா் ஏரிக்கரையில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளாா்.

இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காஞ்சிபுரம் டிஎஸ்பி சிவசங்கா், பொன்னேரிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் அலெக்சாண்டா் ஆகியோா் விசாரணை நடத்தினா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

சம்பவம் தொடா்பாக பொன்னேரிக்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.