40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் தி.சினேகா தலைமையில் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு)பாலகிருஷ்ணன்,பயிற்சி சாா் ஆட்சியா் அமன் திவாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி வரவேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாதுகாவலருடன் கலந்து கொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்,3 சக்கர வாகனம்,வீட்டு மனைப்பட்டா, காதொலிக்கருவி, திறன் பேசிகள்,மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்,தொழில் நுட்பக் கடனுதவிகள் உட்பட 80க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினாா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் தகுந்த வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மலா்விழியை கேட்டுக் கொண்டாா். இக்கூட்டத்தில் அரசு அலுவலா்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது பாதுகாவலா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.