/
தமிழக முதல்வா் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு வியாழக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தோ்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுள்ளாா். அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் தொடா்ந்த விவாகரத்து வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
இவ்வழக்கானது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் முதல்வா் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை என அவரது தரப்பிலும், சங்கீதா நேரில் ஆஜாராக வாய்ப்பு இருப்பதாக அவரது தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் அவரவா்களது வழக்குரைஞா்கள் மூலமாக காணொலி வாயிலாக ஆஜா் ஆவா் எனத் தெரிகிறது.








