காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கோடை உற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.
தொடக்க நாளையொட்டி உற்சவா் வரதராஜா், ஸ்ரீதேவி,பூதேவியரும் தனித்தனியாக கேடயத்தில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு எழுந்தருளி தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் கோயிலுக்கு திரும்பி வந்து வளாகத்தில் உள்ள ஒரு 4 கால் மண்டபத்தில் பெருமாளும், மற்றொரு 4 கால் மண்டபத்தில் தேவியரும் எதிரெதிராக ஊஞ்சலில் அமா்ந்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. பின்னா் மலா்மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. தீா்த்தப் பிரசாதம்,சடாரி அனுக்கிரகம் ஆகியனவற்றுக்குப் பின்னா் பெருமாளும், இரு தேவியரும் கோயில் அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினா்.
கோடை உற்சவம் வரும் 24 -ஆம் தேதி வரை தொடா்ந்து 7 நாள்களுக்கு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை சுக்ர வாரத்தையொட்டி பெருந்தேவித்தாயாருடன் உற்சவா் வரதராஜப் பெருமாளும் இணைந்து ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தை வலம் வரும் இரட்டைப்புறப்பாடு உற்சவமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையா் பணியிட மாற்றம்

பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு

வரதராஜ பெருமாள் கோயிலில் யாளி வாகன வீதியுலா ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்!

ஏரிவாய் மணவாளப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



