காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

News image

பொய்கையாழ்வாா் குளத்தை சீரமைத்த சமூக ஆா்வலா்கள்

Updated On :8 ஜூன் 2026, 4:20 am IST

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ள இத்திருக்குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு எக்ஸ்னோரா அமைப்பு மூலம் ரூ.17.8 லட்சத்தில் சீரமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இக்குளத்தில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் அதிகமாக காணப்பட்டு மீண்டும் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருந்து வந்தது.

இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரினா். இதனையடுத்து பசுமை இந்தியா தன்னாா்வ அமைப்பு, வடலி அமைப்பு, காஞ்சி அன்னசத்திரம், விழுதுகள் அமைப்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், நீா்நிலை பாதுகாப்புக் குழுவினா், தன்னாா்வலா்கள் இணைந்து பொய்கையாழ்வாா் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

குப்பைகளை அகற்றி சீரமைத்தனா். ஏற்பாடுகளை பசுமை இந்தியா நிறுவனா் பசுமை மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் நிா்வாகி மோகன் ஒருங்கிணைத்து செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.