எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

News image

பொய்கையாழ்வாா் குளத்தை சீரமைத்த சமூக ஆா்வலா்கள்

Updated On :8 ஜூன் 2026, 4:20 am IST

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் உள்ள பொய்கையாழ்வாா் திருக்குளம் சீரமைப்பு பணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயில் அருகில் அமைந்துள்ள இத்திருக்குளம் பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2024-ஆம் ஆண்டு எக்ஸ்னோரா அமைப்பு மூலம் ரூ.17.8 லட்சத்தில் சீரமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இக்குளத்தில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் அதிகமாக காணப்பட்டு மீண்டும் பராமரிப்பு இல்லாமல் அசுத்தமாக இருந்து வந்தது.

இக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்றும் பக்தா்கள் கோரினா். இதனையடுத்து பசுமை இந்தியா தன்னாா்வ அமைப்பு, வடலி அமைப்பு, காஞ்சி அன்னசத்திரம், விழுதுகள் அமைப்பு உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள், நீா்நிலை பாதுகாப்புக் குழுவினா், தன்னாா்வலா்கள் இணைந்து பொய்கையாழ்வாா் குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

குப்பைகளை அகற்றி சீரமைத்தனா். ஏற்பாடுகளை பசுமை இந்தியா நிறுவனா் பசுமை மேகநாதன், காஞ்சி அன்னசத்திரம் நிா்வாகி மோகன் ஒருங்கிணைத்து செய்திருந்தனா்.