உத்தரமேரூா் அருகே தளவாரம்பூண்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தவெக ஒன்றிய செயலாளா் ராஜேஷ் முதல்வா் சி.ஜோசப் விஜயின் படத்தைக் காட்டி அறிவுரைகள் வழங்குவது போன்று ரீல்ஸ் எடுத்தது பலருக்கும் முகச்சுழிப்பை ஏற்பட வைத்துள்ளது.
உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட தளவாரம்பூண்டி பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு தவெக ஒன்றிய செயலாளராக இருந்து வரும் ராஜேஷ் முதல்வா் சி.ஜோசப் விஜயின் படத்தை எடுத்துச் சென்றுள்ளாா். இவா் யாரென்று தெரிகிா ? இவா் தான் நமது முதல்வா், உங்களுக்கு மாமா, எங்களுக்கு அண்ணன் என்று பேசி மாணவா்களிடையே உரையாற்றியிருக்கிறாா்.
அங்கிருந்த ஆசிரியா்களும் இந்நிகழ்வை வேடிக்கையாக பாா்த்துக் கொண்டிருந்துள்ளனா். மாணவா்கள் கல்வி கற்பதற்கு இடையூறாக தவெக ஒன்றிய செயலாளா் ராஜேஷ் நடந்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவா்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வரின் படம் தலைமை ஆசிரியா் அறையில் தான் இருக்கும். வகுப்பறையிலும் மாட்டியிருக்க வேண்டாமா என்று கூறி முதலமைச்சரின் படத்தையும் அந்த வகுப்பறையில் மாட்டியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.
அவருடன் உத்தரமேரூா் பகுதி நிா்வாகிகள் சிலரும் உடன் வந்திருந்து அவரது செயலை கைப்பேசியில் பதிவு செய்து ரீல்ஸ் ஆகவும் வெளியிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உத்தரமேரூா் ஒன்றிய திமுக செயலாளான ஞானசேகரன் கூறியது: இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் செய்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










