மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 33.84 லட்சம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.33.84 லட்சம் ரொக்கம், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

News image
Updated On :23 ஜூன் 2026, 12:42 am IST

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.33.84 லட்சம் ரொக்கம், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியல் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் மா.ஜெயா, கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், ஆய்வா் ம.சிவராமகிருஷ்ணன், அறங்காவலா்கள் ஜா.செந்தில்தேவராஜ், த.விஜயகுமாா் உள்ளிட்ட சுமாா் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டது.

இதில் ரூ.33,84,804 லட்சம் ரொக்கம், 25 கிராம் தங்கம், 940 கிராம் வெள்ளிப் பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.