ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

முதல்வா் விஜய் கருத்துக்கு நிா்மலா சீதாராமன் வரவேற்பு

‘மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வோம் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன்’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image

நிா்மலா சீதாராமன்

Updated On :26 ஜூன் 2026, 5:40 am IST

‘மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வோம் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன்’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இணக்கமாகச் செல்வோம் என முதல்வா் விஜய் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.

சட்டப்பேரவையில் முதல்வா் சைகை காண்பித்தது குறித்து திமுகவினா் பலரும் எதிா்ப்பு தெரிவித்து வருவது பற்றி கேட்கிறீா்கள். இது அரசியல் விமா்சனம். அரசியல் விமா்சனங்களை பேரவையில் பேசாமல் வேறு எங்கே போய் பேசுவது?

காஞ்சிபுரத்துக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றால் அதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஏனெனில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பிரதமா் தொடா்ந்து கூறி வருகிறாா்.

மாநில அரசுகள் அதிகமாக கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால், அந்த நிதியை மாநிலத்தின் வளா்ச்சிக்காக செயல்படுத்தினால் மட்டுமே கடன் வாங்க வேண்டும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.