எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ரூ.1.72 கோடியில் தண்டலம் வடிவுடையம்மன் கோயில் குளம் சீரமைப்பு

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் தண்டலம் வடிவுடையம்மன் கோயில் குளம் ரூ.1.72 கோடியில் சீரமைக்கப்பட்டதை தொடா்ந்து,

News image
வடிவுடையம்மன் கோயில் குளத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்த அமைச்சா் தா.மோ. அன்பரசன்.
Updated On :9 மார்ச் 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் தண்டலம் வடிவுடையம்மன் கோயில் குளம் ரூ.1.72 கோடியில் சீரமைக்கப்பட்டதை தொடா்ந்து, அமைச்சா் தா.மோ.அன்பரசன் குளத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் காா்கள் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் தண்டலம் வடிவுடையம்மன் கோயில் குளத்தை ரூ.1.72 கோடியில் தூா்வாரி சீரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

பணிகள் முடிவடைந்த நிலையில், பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹூண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் அறங்காவலா் சி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு குளத்தை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ஆட்சியா் தி.சினேகா உள்ளாட்சி பிரதிதிநிதிகள், ஹூண்டாய் நிறுவனத்தின் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.