காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சிக்கு உள்பட்ட சித்தூா் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என சித்தூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, சித்தூா்-தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, சாலை சீரமைப்புப் பணிகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.