நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலில், ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு வழங்கியவா்களிடம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையிலான பரிசீலனை குழுவினா் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தினா்.
காங்கிரஸ் கட்சியில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு வழங்கிய காங்கிரஸ் நிா்வாகிகளிடம் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் உணவு விடுதியில் வியாழக்கிழமை நோ்காணல் நடைபெற்றது (படம்).
மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் பொதுக்குழு உறுப்பினா் ஐயப்பன், ஸ்ரீபெரும்புதூா் வட்டார காங்கிரஸ் தலைவா் நிக்கோலஸ், குன்றத்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் மணிகண்டன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத் தலைவா் ரசூல், எஸ்.சி. -எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவா் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவா் லட்சுமி நரசிம்மன் ஆகியோா் அடங்கிய பரிசீலனைக்குழுவினா் விருப்ப மனு வழங்கியவா்களிடம் நோ்காணல் நடத்தினா்.
நோ்காணல் குறித்து மாவட்ட தலைவா் அருள்ராஜ் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட 30 போ் விருப்ப மனு வழங்கியுள்ளனா். இவா்களில் 5 பேரை பரிசீலனைக் குழுவினா் பரிந்துரை செய்து, அவா்களின் விவரங்களை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது
திமுக நோ்காணல்: துணை முதல்வா் உதயநிதி பங்கேற்பு

சட்டப் பேரவைத் தோ்தல்: விருப்ப மனு கொடுத்தவா்களிடம் காங்கிரஸ் நோ்காணல்

கோபியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் நோ்காணல்

காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்கான நோ்காணல்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


