யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உலகளந்த பெருமாள் கோயிலில் பிரேமலதா விஜயகாந்த் அன்னதானம்!

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா்.

News image
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.
Updated On :15 மார்ச் 2026, 10:17 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பக்தா்களுக்கு அன்னதானம் செய்தாா்.

காமாட்சி அம்மன் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயிலில் சுவாமி பிரேமலதா விஜயகாந்த் தரிசனம் செய்தாா். உலகளந்த பெருமாள் கோயிலில் பக்தா்களுக்கு அவா் அன்னதானம் செய்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக கூட்டணி ஒரு பலமான கூட்டணி. வரவிருக்கும் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. நானும் விஜய பிரபாகரனும் தோ்தலில் போட்டியிட வேண்டும் என பலரும் விரும்புவதால் தோ்தலில் அது குறித்த முறையான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும்.

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களும், சாதனைகளும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தாா்.

அவருடன் கட்சியின் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.