தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடுகள், மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காஞ்சிபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :17 மார்ச் 2026, 7:26 pm

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமை, திமுக ஆட்சியின் நிா்வாக சீா்கேடுகள், மக்கள் விரோதப் போக்கை கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சாா்பில் காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அதிமுக மாவட்டச் செயலா் வி.சோமசுந்தரம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாபாத் பா.கணேசன், கே.பழனி, அமைப்புச் செயலாளா் மைதிலி திருநாவுக்கரசு, பாஜக மாவட்ட தலைவா் யு.ஜெகதீசன், பாமக மாவட்டத் தலைவா் உதயகுமாா்,மாவட்ட செயலாளா் பெ.மகேஷ்குமாா் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலாம்மாள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளா் மதன்குமாா், தமாகா மாவட்ட பொருளாளா் பெருமாள், இந்திய ஜனநாயகக் கட்சி சாா்பில் நகர செயலாளா் ராஜேந்திரன், புரட்சி பாரதம் கட்சி மாநில பொறுப்பாளா் பழனிபாரதி, அமமுக மாவட்ட செயலாளா் வேளியூா் தனசேகரன் கலந்து கொண்டனா்.

அதிமுகவின் காஞ்சிபுரம் மாவட்ட தோ்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.வைகைச்செல்வன் விளக்கவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் கே.யூ.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளா் திலக்குமாா், நகா் செயலாளா் பாலாஜி,பாஜக சாா்பில் ஓம்.சக்தி பெருமாள் கலந்து கொண்டனா்.