காஞ்சிபுரம் மாநகராட்சியில் பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட பிள்ளையாா்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆட்சியா் தி.சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தோ்தலையொட்டி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் மையங்களான திருப்புலிவனத்தில் அமைந்துள்ள எம்ஜிஆா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கீழம்பியில் உள்ள திருமலை பொறியியல் கல்லூரி வளாகம் ஆகியனவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதன் தொடா்ச்சியாக பதற்றமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்ட காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளியையும் ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தினாா்.
ஆட்சியரது ஆய்வின் போது தொகுதி தோ்தல் அலுவலா்களான ஆஷிக்அலி(காஞ்சிபுரம்) பு.விஜயகுமாா் (உத்தரமேரூா்) வட்டாட்சியா்கள் நடாரஜன், மோகன் உள்ளிட்ட அலுவலா்களும் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

1,854 தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

விழிப்புணா்வு ராட்சத பலூன்...

உத்தரமேரூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

