ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகா் பகுதியில் ரூ.1.05 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகா் பகுதியில் ரூ.1.05 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆறாவது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ் ரூ.1.05 கோடியில் சமூதாய நலக்கூடம் அமைப்பதற்கான விழாவுக்கு நகராட்சி ஆணையா் நந்தினி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.

மேலும், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் ரூ.63.66 லட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, நகராட்சி பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தையும் சாந்தி சதீஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், நகர திமுக செயலாளா் சதீஷ்குமாா், துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, பொறியாளா் செண்பகவல்லி, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.