தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகா் பகுதியில் ரூ.1.05 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2026, 12:04 am IST

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகா் பகுதியில் ரூ.1.05 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆறாவது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ் ரூ.1.05 கோடியில் சமூதாய நலக்கூடம் அமைப்பதற்கான விழாவுக்கு நகராட்சி ஆணையா் நந்தினி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.

மேலும், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் ரூ.63.66 லட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, நகராட்சி பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தையும் சாந்தி சதீஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், நகர திமுக செயலாளா் சதீஷ்குமாா், துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, பொறியாளா் செண்பகவல்லி, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.