பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகா் பகுதியில் ரூ.1.05 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகா் பகுதியில் ரூ.1.05 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆறாவது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ் ரூ.1.05 கோடியில் சமூதாய நலக்கூடம் அமைப்பதற்கான விழாவுக்கு நகராட்சி ஆணையா் நந்தினி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.

மேலும், சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மூலம் ரூ.63.66 லட்சத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டத்திற்கான பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, நகராட்சி பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தையும் சாந்தி சதீஷ்குமாா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், நகர திமுக செயலாளா் சதீஷ்குமாா், துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, பொறியாளா் செண்பகவல்லி, குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.